மணிக்கு ஒரு தடவ லிட்டர் கணக்குல போகுது.. இதுக்கு போயி யாருடா சிறுநீர்னு பேர் வச்சது?
சென்னை : தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளிர் ஒருபுறம் வாட்டி வதைக்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம் வந்து விட்டால், வெளியில் சேறு, சகதியாக இருக்கும், நசநசவென மழை பெய்து கொண்டே இருக்கும், வெளியில் செல்வதற்கே கடுப்பாக இருக்கும். இதெல்லாம் பத்தாது என அடிக்கடி சிறுநீர் வேறு வந்து, பாத்ரூமுக்கு சென்று வந்தபடியே இருக்க வேண்டும்.
வெயில் காலங்களில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தால்கூட, அவ்வளவும் வியர்வையாக வெளியேறி விட்டது மாதிரி, நாக்கு வறண்டு விடும். ஆனால், மழைக்காலத்தில் தப்பித்தவறி கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டால்கூட அவ்வளவுதான். இவ்வளவு தண்ணீர் எங்கே இருந்தது என நாமே ஆச்சர்யப்படும் அளவிற்கு நான்கு முறையாவது பாத்ரூம் சென்று வரும்படி ஆகி விடும்.
இப்படி மழையால் பாதிக்கப்பட்ட நெட்டிசன்கள், "மணிக்கு ஒரு தடவ லிட்டர் கணக்குல போய்ட்டு இருக்கு.. இதுக்கு போயி யாருடா சிறுநீர்னு பேர் வச்சது?" என தங்களைத் தாங்களே நொந்து கொண்டு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். சைடுகேப்பில், மாணவர்கள் சார்பில், "சனி, ஞாயிறு மட்டும் நீ லீவு எடுத்துக்கோ.. மத்த நாள்ல கரெக்ட்டா வந்துடு" என மழைக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications