சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்கற மாறி.. ஏதாவது வேலை இருந்தா யாராவது சொல்லுங்களேன்!
கையில் காசில்லாத காரணத்தால், தத்துவங்களாகப் பகிர்ந்து, தங்களது பிரச்சினைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பள்ளிக் காலங்களில் கணக்குப் புத்தகத்திலிருந்த பிராப்ளங்களைவிட, தற்போது வாழ்க்கையில் அதிகமாக இருப்பதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

'கஜானால (அதாங்க நம்ம பாக்கெட்ல) காசில்லே'.. என இன்னும் சம்பளம் வாங்காமல் ஒரு குரூப் புலம்பிக் கொண்டிருக்க ..'கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியலே'.. என வாங்கிய சம்பளம் அனைத்தும் ஒரே நாளில் காலியாகி விட்டது என மாதத்தின் முதல்நாளே மற்றொரு குரூப்பும் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

வேலை பார்த்தும் நினைத்த பொருள் எதையும் வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் இந்தப் புலம்பல்களுக்குக் காரணம். ஒருநாள் நமக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும் என நம்பினாலும், அப்போது நமக்கு எது பிடிக்கும் என்பதே மறந்து போய் விடும் என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது.

பேசாமல் சாப்பிட்டு சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுந்திருப்பது போல் ஏதாவது வேலை கிடைத்தால் தேவலை என வித்தியாசமாக சிந்தித்து, நகைச்சுவையாக தங்களது புலம்பல்களையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில புலம்பல்களை.. இல்லையில்லை மீம்ஸ்களை இங்கே தொகுப்பாக பார்க்கலாம்...






















Click it and Unblock the Notifications