கொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்
சென்னை: ஒற்றை மீம்ஸ் என்றாலும் சில மீம்ஸ்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அப்படி ஒரு மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுவும் டாஸ்மாக், கொரோனா இரண்டையும் தொடர்பு படுத்தி வந்துள்ள மீம்ஸ் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது நாம் அறிந்த ஒன்று தான். சாதாரணமாக ஒரு விஷயத்தை சொல்வதை விட மீம்ஸ் மூலம் சொல்லும் போது அது பெரிய அளவில் மக்களிடம் போய் சேரும்.
ஒற்றை மீம்ஸ் போதும், தேசத்தின் மிகப்பெரிய தலைவராக இருந்தாலும் , எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் காலி செய்வதற்கு அப்படி வந்த மீம்ஸ்கள் இன்று வரை உலா வருகின்றன.
கொரோனா வந்த பிறகு வந்த வாழ்வியலை தொடர்புபடுத்தி, மக்களின் கஷ்டத்தை தொடர்பு படுத்தி வந்த மீம்ஸ்கள் பலவற்றை பார்த்திருப்போம். இந்த மீம்ஸையும் பாருங்கள். ரொம்ப சாதாரணம், ஒருவர் கொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. என்கிறார். அதற்கு மற்றொரு நபர் எங்கடா என்கிறார். அதற்கு அவர் ஒயின் ஷாப்பில் என்கிறார். இப்படித்தான் முடிகிறது. இந்த மீம்க்கு வடிவேல் டெம்பள்ட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்காததால் காண்டான யாரோ போட்ட மீம்ஸ் இது என்பது தெளிவாகிறது.