மாட்டுக்கும் மானம் இருக்கும்னு.. டவுசர் மாட்டி விட்ருக்காங்க பாருங்க.. அந்த மனசுதான் சார் கடவுள்!
சென்னை : மாட்டுப்பொங்கல் ஸ்பெஷலாக வீட்டு வாசல்களில் வரையப் பட்டுள்ள விதவிதமான கோலங்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
பொங்கல் என்றாலே கரும்பு, சர்க்கரை பொங்கலுக்கு அடுத்தபடியாக நம் நினைவில் வருவது அழகழகான கோலங்கள்தான். அதிலும் பொங்கலன்றும், மாட்டுப் பொங்கலன்றும் எல்லா வீட்டு வாசல்களிலும் விவிதமான வண்ணக் கோலங்கள் நிறைந்திருக்கும். அன்றைய தினம்தான் மக்கள் தாங்கள் கற்றுக் கொண்ட வித்தைகளை எல்லாம் வாசல்களில் கோலமாக வெளிப்படுத்துவார்கள்.
அதிலும் இந்த பொங்கல் பானை கோலத்தைக்கூட, பானை என நம்பி விடலாம். ஆனால் இந்த மாடு கோலம் இருக்கிறதே, அதெல்லாம் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும். சில மாட்டு கோலங்களைப் பார்த்தால், மாடே அது மாடென்று நம்பாது. அப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாடலில் இருக்கும்.
இப்படி விதவிதமாக மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் கோலங்களை வரைந்தவர்களைக் கலாய்த்து விவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்...
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications