இதையேதான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில இருக்கும் போதும் சொன்னாங்க....?!
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஏரளாமனா மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஏரளாமனா மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அ
வர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து வருகின்றனர். இந்நலையில் இளைஞர்களின் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
எறங்கிட்டாங்ல்ல...
விவசாயிகளுக்கு ஆதரவா மாணவர்கள் போராட்டம்- இதோ பார்ரா நம்ம ஊரு பசங்களும் எறங்கிட்டாங்ல்ல...
கலாம் ஐயா வாழ்ந்த ஊரு
அது கலாம் ஐயா வாழ்ந்த ஊரு... அப்படி தான் இருக்கும்... ஒன்றும் செய்ய முடியாது...
ஏன் கைது செய்யப்படுவதில்லை?
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் திரண்டால் கைது செய்யப்படுகிறார்கள்.. ஆனார் தேர்தலில் நிற்கின்ற அரசியல் கட்சி கூட்டம் கூட்டமாக ஒன்று கூடினால் மட்டும் ஏன் கைது செய்யப்படுவதில்லை??
போராட்டம் ஆரம்பிச்சிட்டாங்க
நம்ம பசங்க போராட்டம் ஆரம்பிச்சிட்டாங்க.. அப்படி தர்மபுரி, கிருஷ்ணகிரி சொல்லிட்டு வேலூர் போராட்டத்தில் போய் கலந்துக்கிறேன்...
அப்போவும் இதையேதான் சொன்னீங்க
இதையேதான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில இருக்கும் போதும் சொன்னாங்க....?!
என்ன அர்த்தம்?
நாங்க இவ்வளவு சொல்லியும் நீங்க மறுபடியும் போராட்டம் பண்ண மெரினா வந்து இருக்கீங்கன்னா என்ன அர்த்தம்??