முதல்வர் விரைவில் பூரண நலம் பெறுவார் என கூறிய ஜோதிடரும் இவர்தான்!!
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து குழப்பி வரும்நிலையில் அதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டார என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து வருகின்றனர். ஆனால் ரஜினியோ தான் அரசியலுக்கு வருவதும் வராததாதும் கடவுள் கையில் தான் உள்ளது எனக்கூறி நழுவி வருகிறார்.
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தான் அரசியல் கட்சி தொடங்கினால் பணம் சம்பதிக்க நினைப்பவர்களை உடன் வைத்திருக்க மாட்டேன் என தெரிவித்தார்.
இதனால் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அது கடவுள் கையில்தான் உள்ளது என்றார். ஆனால் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என ஜோதிடர்கள் கணித்து வருகின்றனர். இதனை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
நாங்களும் பாக்கறோம்
நீ எப்ப ஆண்டவன் சொல்லாம முடிவெடுக்க போறன்னு பார்க்கறோம்.. என கலாய்க்கிறது இந்த மீம்
வாயில் புண்ணா?
தனது அரசியல் பிரவேசம் குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என ரஜினி கூறியதற்கு, ஏன் வாயில புண்ணா எனக்கேட்டு கலாய்க்கிறது இந்த மீம்..
என்னடாது புஸ்ஸாயிடுச்சு
நான் அரசியலுக்கு வரனுமா வேண்டாமாங்கிறத ஆண்டவன் தான் முடிவு பண்ணனும்.. என்னாடாது புஸ்ஸாயிடுச்சு..
அந்த ஜோசியர்தான்
முதல்வர் விரைவில் பூரண நலம் பெறுவார் என கூறிய ஜோசியரும் இவர்தான் என கலாக்கிறது இந்த மீம்..
ரத்தம் கக்கி சவான்..
இந்த போஸ்ட் பார்த்து சிரிச்சுட்டு ஷேர் பண்ணாதவன் ரத்தம் கக்கி சவான்.. என கலாய்க்கிறது இந்த மீம்..
அடுத்த படம் ரிலீஸ்..
அடுத்த படம் ரிலீஸ் ஆகுறப்பயாவது சொல்லுவீங்களா...?? என கேட்கிறது இந்த மீம்..
கூடவே பொறந்தது..
தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ... கூடவே பொறந்தது என்னிக்கும் போகாது...! என ரஜினியின் டயலாக்கை வைத்தே கலாய்க்கிறது இந்த மீம்..
ஒரு திருமணத்திற்கு கூட..
இதுநாள் வரை அந்த மண்டபத்தில் இலவசமாக ஒரு திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.. மண்டபத்தின் வாடகை இரண்டு லட்சத்துக்கும் மேல்..