காவிரி தீர்ப்பு வந்துவிட்டது தமிழனை காக்க வந்த ஆன்மீக அரசியல் தலைவரை காணோம்! ரஜினியை வாரும் டிவிட்ஸ்
காவிரி வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கருத்து தெரிவிக்காதது குறித்து கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
Recommended Video
சென்னை: காவிரி வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கருத்து தெரிவிக்காதது குறித்து கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
காவிரி வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட் தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழகத்துக்கான தண்ணீரை வாரி வழங்கியுள்ளது சுப்ரீம்கோர்ட்.
இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆன்மிக அரசியலை கையிலெடுத்துள்ள ரஜினிகாந்த் இன்னும் வாய்திறக்கவில்லை. அவரை வச்சு செய்து வருகின்றர் நெட்டிசன்ஸ்.
|
எப்போதும்போல இருந்திடுவோம்...!
காவிரி தீர்ப்பு வந்திடுச்சி நாம எப்போதும்போல இருந்திடுவோம்...!
|
மணல் அள்ள முடியாதே
காவிரி தீர்ப்பு தமிழக அரசியல்வாதிகளுக்கு சோகம். இருக்கிற கொஞ்ச தண்ணியும் வந்துவிட்டால் ஆற்றில் மணல் அள்ள முடியாதே
|
ரஜினிக்கு தலைவலிதான்
காவிரி பிரச்சினை சம்பந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகமோ பாதகமோ ரஜினிக்கு நிச்சயம் தலைவலிதான்.
|
ரஜினி ரியாக்ஷன் இதுதான்
பத்திரிகை: காவிரி தீர்ப்பு பத்தி உங்க கருத்து என்ன?
ரஜினி: ரியாக்ஷன் இது என இந்த படத்தை போட்டு கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்
|
தலைவரை காணோம்
காவிரி தீர்ப்பு வந்து விட்டது தமிழனை காக்க வந்த ஆன்மீக அரசியல் தலைவரை எந்த பேட்டியையும்
காணோம்.. போட்டோவோடு சரியா?