ரஜினி அழைக்கிறார்.. ஐய்யோ! இந்த நேரம் பார்த்தா பஸ் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க? இப்போ எப்படிப் போறது!!
ரஜினிகாந்த் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் இந்த நாளிலா ஸ்ட்ரைக் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் இந்த நாளிலா ஸ்ட்ரைக் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பஸ் ஸ்ட்ரைக்கால் சென்னைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுப்பதையே பல ரசிகர்கள் கனவாக வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரஜினிகாந்த் போட்டோ எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கான விழா இன்று தொடங்கியது. ஆனால் தற்போது தமிழகத்தில் பஸ் ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் சென்னைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
|
சேர்த்தே பிட்டை போடுகிறார்
#ரஜினி குசும்பர். #2:0 படம் மற்றும் #இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கும் சேர்த்தே பிட்டை போடுகிறார். ஜாக்கிரதை மக்களே..
|
துணைக்கு அழைக்கிறார்
7 வயது சிறுவன் மதுபானக் கடைகளுக்கு எதிராக தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கும்வேளையில், 70 வயதையொத்த #ரஜினி தனது செயல்களுக்கு எல்லாம் கடவுளை துணைக்கு அழைக்கிறார்..
|
இப்பவா ஸ்ட்ரைக் நடக்கனும்?
#ரஜினி அழைக்கிறார்?
ஐயோ! இந்த நேரம் பார்த்தா பஸ் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க?இப்போ எப்படிப் போறது!!
|
இவரு பேர பயன்படுத்தி..
ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை அரசியலில் பயன்படுத்துகின்றனர்: #ரஜினி
இவரு பேர பயன்படுத்தி 7,8,பேரு முதல்வர் ஆன மாதிரியே பேசுரது..
|
சும்மாவே நாறி கெடக்கு.
தீர யோசித்தே நான் முடிவு எடுப்பேன். #ரஜினி
அய்யா போதும் நீங்க தமிழ்நாட்டுக்கு செஞ்சது. அரசியல் சும்மாவே நாறி கெடக்கு.. மகிழ்ச்சி..
|
பூசாத மாதிரியும் இருக்கனும்..
நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள் #ரஜினி
ஈயம் பூசுன மாதிரி இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்...