என்னாது.. இன்னும் கொரோனா சாகலையா.. அவசரப்பட்டு நான் அடுத்த பிறவி எடுத்து திரும்ப வந்துட்டேனே!
கொரோனா மற்றும் லாக்டவுண் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு மீம்ஸ்கள் தான் மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக இருக்கிறது. இதில் பல மீம்ஸ்கள் இயல்பு வாழ்க்கையோடு ஒத்துப் போவதாலேயே அதிகம் ரசிக்க முடிகிறது.
முதல் அலையில் மிக்சரில் இருந்து காராபூந்தி, கடலைப்பருப்பை பிரித்தெடுத்து பொழுதை போக்கிய மக்கள், இம்முறை காய்கறிகளில் கைவண்ணத்தைக் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால், தள்ளுவண்டிக்காரர்கள் சொல்லும் விலைக்கு காய்கறிகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. அப்படிப்பட்ட விலையுயர்ந்த காய்கறிகளை வீணாக்கினால் சும்மா விடுவார்களா.. இதோ விதவிதமாய் மீம்ஸ் போட்டு தள்ளி இருக்கிறார்கள்.
என்னண்ணே.. கழுத்துல வெள்ளை பூஞ்சை மாதிரி தெரியுது.. அடேய் அது பிஞ்ச தலகாணியோட பஞ்சுடா.. தெறி மீம்ஸ்
அதில் ஒரு மீம்ஸில் கொரோனா முதல் அலையில் செத்துப் போனவர் ஒருவர், திரும்ப மறுபிறவி எடுத்து வந்து, 'என்னாது இன்னும் கொரோனா போகலையா..?' எனக் கேட்கும் கற்பனை அல்டிமேட்.
இப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...