அமைதியை விட சிறந்த மகிழ்ச்சி வேறுண்டா!
சிலர் அவசரப்படுவார்கள்.. பலருக்கு எதிலுமே பொறுமை இருக்காது.. ஆனால் அமைதி காத்துப் பாருங்கள்.. அதை விட மகிழ்ச்சி, நிம்மதி வேறு இருக்காது.
பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள்.இன்று குடும்பங்கள் இடையே பல சண்டை சச்சரவிற்குக் காரணம் பொறுமையின்மை தான். ஒரு சண்டை வரும் போது இரு குடும்பமும் உட்கார்ந்து நிதானமாக பேசினாலே சண்டை அப்போதே முடிந்து நிம்மதி கிடைத்துவிடும் ஆனால் சில அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாக பகையோடு வாழும் குடும்பங்களும் இருக்கிறது.

இன்று பலர் விவாகரத்திற்காக நீதிமன்றத்தின் வாயிலில் காத்துக் கிடக்கின்றனர். அதற்குக் காரணமும் பொறுமை இல்லாதது தான். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருந்தாலே பாதி பிரச்சினை இருக்காது. அலுவலக டென்ஷன் வீட்டு டென்ஷன் என்று இருப்பவர்களிடம் நாம் சிறிது நேரம் பொறுமை காத்து அவர்கள் கோபம் குறைந்தவுடன் பேச வேண்டும்.
சில நேரங்களில் அமைதியாக இருப்பதே பல பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட முடிகிறது. அமைதியில்லா மனம் இருந்தால் எந்த ஒரு செயலையும் நாம் திறம்பட செய்ய முடியாது. அமைதியாக இருப்பதில் தவறில்லை. மன அமைதிக்காக சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர். உங்கள் மனதுக்குப் பிடித்த பாடல்களை கேளுங்கள்.
அமைதியாக இருப்பதில் கூட ஒரு சந்தோசம் இருக்கிறது. குழந்தைகளோடு விளையாடும் போது மனம் அமைதி பெறுகிறது. கோபத்தை விட்டு அமைதியாக இருங்கள். அமைதியை விட சிறந்த மகிழ்ச்சி வேறு ஏதேனும் இவவுலகில் உண்டா.












Click it and Unblock the Notifications