பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்காக பஸ் டிரைவராக மாறிய உடுப்பி ஆசிரியர்
போக்குவரத்தை காரணம் காட்டி பள்ளி படிப்பு நின்று விடக் கூடாது என்று டிரைவராக மாறினார் உடுப்பி ஆசிரியர்.
உடுப்பி: போக்குவரத்தை காரணம் காட்டி எந்த மாணவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட கூடாது என்பதற்காக கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆசிரியர் பேருந்து வாங்கி அதன் டிரைவராகவே மாறிவிட்டார்.
அனைத்து மாநிலங்களில் பணத்தை காரணம் காட்டி மாணவர்கள் படிக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக அரசுபள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளி இடைநில்லா குழந்தைகளை தடுக்கப்படுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் இடைநில்லா குழந்தைகளுக்காக மாநிலத்துக்கு மாநிலம் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியரோ அரசு செய்யும் வரை காத்திருக்காமல் தானாக முன்வந்து ஒரு காரியத்தை செய்துள்ளார்.

டிரைவர்
உடுப்பி மாவட்டம் பிரம்ஹாவர் நகரில் பராலி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுற்றியுள்ள கிராமப் புற மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் விதமாக அப்பள்ளி ஆசிரியர் ராஜாராமன் பேருந்து டிரைவராக மாறியுள்ளார்.

டிரைவர் நியமனம்
பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் மினி பேருந்து வாங்குவதற்கு உதவி செய்தனர். அதை வைத்து பேருந்தை வாங்கினார் ராஜாராமன். ஆனால் குழந்தைகளை அழைத்து சென்று வர டிரைவரை நியமித்தால் அவருக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகத்தால் முடியாது.

4 டிரிப்புகள்
எனவே தானே டிரைவராக மாறிவிட்டார். தினமும் காலை 8.10 மணிக்கு அவரது வீட்டை விட்டு ராஜாராமன் கிளம்புவார். அனைத்து மாணவர்களும் 9.20 மணிக்கு பள்ளி வகுப்பறையில் இருக்கும்படி 4 டிரிப்புகளாக பேருந்தை இயக்குவார்.

பணியை மேற்கொள்கிறார்
தான் இப்பள்ளியை விட்டு சென்றாலும் இந்த பேருந்து வசதி தொடர வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது இவர் விடுப்பில் சென்றுவிட்டாலும் அவரது நண்பர்களை அனுப்பி குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கிறார்.

அர்ப்பணிப்பு குணம்
இதனால் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவர்களின் வருகை 60 முதல் 90 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை குசுமா கூறுகையில், இந்த பள்ளியில் 4 ஆசிரியர்கள்தான் உள்ளனர். அவர்களில் ராஜாராமன்தான் மிகவும் அர்ப்பணிப்பு குணம் கொண்டவர். அவர் உடற்கல்வி, அறிவியல், கணிதம், ஆகியவற்றுடன் தற்போது பேருந்தையும் இயக்குகிறார் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications