வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வளர்ப்பு மகன் சுதாகரன் எனது வீட்டுக்கே வரவில்லை - பத்திரிகை செய்திகளுக்கு ஜெயலலிதா மறுப்பு
சென்னை:
எனது போயஸ் தோட்ட வீட்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றப்பட்ட முன்னாள் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மீண்டும் எனது வீட்டுக்கு வந்து செல்கிறார் என்றும், அதிமுகவில் சேர அவர் விரும்புவதாகவும் பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எனது வீட்டுக்கு சுதாகாரன் அடிக்கடி வந்து செல்வதாக சில பத்திரிகைளில் செய்தி வந்துள்ளது.மேலும், அதிமுகவில் சேர அவர் முயற்சி செய்வதாகவும் செய்திகள் வந்துள்ளன. இச் செய்திகள் முழுவதும் அடிப்படை ஆதாரமில்லாதது.
சுதாகரன் நற்பணி மன்றம் பெயரில் அதிமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சுதாகரன் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் சுதாகரன் பெயரில் நடைபெற்று வரும் நற்பணி மன்றங்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
சின்ன எம்ஜிஆர் என்று தனது தொண்டர்களால் அழைக்கப்படும் சுதாகாரன், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர். இவரை தனது வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்ட ஜெயலலிதா, தான் முதல்வராக இருந்தபோது சுதாகரனுக்கு பெரிய அளவில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக, சுதாகரனை தனது வளர்ப்பு மகன் இல்லை என்று கூறிய ஜெயலலிதா தனது வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications