தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நிதி மசோதா - நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல்

புது தில்லி:

2000-2001-ம் ஆண்டுக்கான நிதி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா, மக்களவையில் புதன்கிழமை அறிவித்தார்.

சாதாரண மக்களும், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் பயனடையும்வகையில் பல சலுகைகளை அவர் அறிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை, கல்வி நிலையங்கள், மருந்து தயாரிப்பு,உயிரி-தொழில்நுட்பத் துறைகளை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள்அளிக்கப்பட்டுள்ளது.

இத் துறைகளுக்கும், கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதிவளர்ச்சி மையம் ஆகியவற்றுக்கும் முதல் 10 ஆண்டுகளுக்கு வரி செலுத்துவதிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சுங்கத் துறையில் வரி விதிப்பில் சில மாற்றங்களை அமைச்சர் அறிவித்துள்ளார்.தேயிலை, காபி போன்றவற்றுக்கான அடிப்படை சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 35சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழிக் கறி மீதான அடிப்படை சுங்க வரி 35சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி விதிப்பிலும் பல மாற்றங்களை அமைச்சர் செய்துள்ளார்.

வீடு கட்டும் தொழிலுக்கு நன்மை ஏற்படும் வகையில், இனி ரூ. 1 லட்சம் மதிப்புள்ளசொத்துக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

உள்நாட்டுத் தொழில்கள் மேம்பாடு அடையும் வகையிலும், பொதுமக்கள்பயனடையும் வகையிலும், நிதி மசோதாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாக நிதிஅமைச்சர் அறிவித்துள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+