தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மே 11 ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
டெல்லி:
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து இந்தியாவில் அனைத்து முன்னணிவங்கிகளும் வரும் 11 ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
வரும் வியாழக்கிழமை அவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 6 லட்சம் வங்கிஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத் துணைத் தலைவர் ராமநாத் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவில் வங்கிகளைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்துநாங்கள் வேலைநிறுத்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் போராட்டம் நாடு தழுவியதாக இருக்கும். எங்களுடைய கோரிக்கையை ஏற்று தனதுதனியார்மயமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று நம்புகிறோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications