தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
சீனாவுக்கு, நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்து அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்சீனாவில், அமெரிக்க வர்த்தக முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
34 பேர் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 4 பேர் எதிர்த்து ஓட்டுப் போட்டனர். இந்த மசோதா நிறைவேறியுள்ளது அதிபர் பில் கிளிண்டனுக்குக்கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. வர்த்தக வழிமுறைகள் கமிட்டி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதேபோல, செனட்டின் நிதிக் கமிட்டியிலும் இந்த மசோதா 19-1 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.
சீனாவுக்கு நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்து கொடுப்பதில் அமெரிக்க தொழிலாளர் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சட்ட மசோதவைஎதிர்த்து பெரிய அளவில் பிரச்சாரம் நடந்து வந்தது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புபறிபோகும் என்று அவர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் சட்ட மசோதா நிறைவேறுதில் தனது கெளவரம் அடங்கியிருப்பதாக கிளிண்டன் நினைத்தார். தற்போது மசோதா எளிதான முறையில்நிறைவேறியிருப்பதால், மகிச்சியுடன் எம்.பிக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கிளிண்டன் கூறுகையில், இந்த சட்டம் நிறைவேறியிருப்பதன் மூலம், அமெரிக்க ஏற்றுமதி தொடர்பாக சீனாவுக்கு இருந்து வந்த தடைகள் இனிமேல்நீங்கும். சீனாவில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகஅளவில் விற்பனையாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த சட்டம் தோல்வியடைந்திருந்தால் அமெரிக்க ஏற்றுமதியும், அமெரிக்கர்களுக்கு கிடைக்கவிருக்கும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டிருக்கும்.நமது போட்டியாளர்கள் சீனாவின் மார்க்கெட்டைப் பிடித்திருப்பாார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.