தமிழகத்தில் இன்று
சென்னை:
வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களிலும் தபால் நிலையத்திலும் கஸ்டம்ஸ்அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் அமெரிக்கா. சவுதி அரேபியா, ஐக்கியஅரபு நாடுகளின் கரன்சிகள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு 52 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் என்று சென்னை கஸ்டம்ஸ் கமிஷனர்ரெட்டி.சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் எம்.வி.எஸ். பிரசாத் ஆகியோர்தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட்) என்றபெயரில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய கஸ்டம்ஸ்புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்ட ஒரு பார்சலைகஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டன. டாகுமென்ட் என்று பெயரிடப்பட்டிருந்தஅந்த பார்சலில் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருந்தன.
பின்னரி சிங்கப்பூர் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்ட இரண்டுபார்சல்களையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவற்றில் 33500 அமெரிக்க டாலர்கள், ஒரு லட்சம் சவுதி அரேபிய ரியால், ஐக்கியஅரபு நாடுகளின் கரன்சியான திராம்ஸ் 1500 கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பரங்கிமலையில் உள்ள விரைவுத் தபால் மையத்தை கஸ்டம்ஸ்அதிகாரிகள் அதிரடி சோதனையிட்டனர். அங்கு சந்தேகதிற்குரிய நான்கு பார்சல்கள்இருந்தன 23,500 அமெரிக்க டாலர்கள், ஒரு லட்சம் சவுதி ரியால், ஐக்கிய அரபுநாடுகளின் திராம்ஸ் 500 ஆகியவை இந்த நான்கு பார்சல்களில் இருந்தன.
இவற்றின் இந்திய மதிப்பு 52 லட்சத்து 68ஆயிரம் ரூபாய் என்று கஸ்டம்ஸ்ஆணையாளர்கள் ரெட்டி. பிரசாத் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், திருட்டு சினிமா வி.சி.டிக்கள் கடத்தலுக்கு அதிகாரிகள்உடந்தை என்ற செய்தி அப்பட்டமான பொய் என்றனர்.












Click it and Unblock the Notifications