For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
மன்னரை மிரட்டும் தீவிரவாதிகள்

டெல்லி:

ஐக்கிய அஸ்ஸாம் விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பின் உறுப்பினர்கள் மீது பூடான் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்தால் பூடான் மன்னர் ஜிக்மே சிங்கேவாங்சுக் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஸ்ஸாமை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று இந்த தீவிரவாத அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் உளவு நிறுவனமானஐ.எஸ்.ஐ. இவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது.

பூடானில் இருந்து கொண்டு செயல்படும் உல்ஃபா தீவிரவாதிகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் பூடான் மன்னர் ஜிக்மே சிங்கேவாங்சுக் கூறியிருந்தார். இந்த நிலையில், உல்ஃபா அமைப்பின் "கமாண்டர் இன் சீப் என்று கூறிக் கொள்ளும் பரேஷ் பரூவா இந்த எச்சரிக்கையைவெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் வங்கதேச தலைநகர் தாக்கா வந்த பூட்டான் வெளியுறவுத் துறை அமைச்சர், பூடானில் உள்ள உல்ஃபா தீவிரவாதிகளை வெளியேற்றவங்கதேசம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். வங்கதேசத்திலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், உல்ஃபா தீவிரவாதிகள் உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாகவே, பூடானில் தீவிரவாதிகள் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துவந்தது. ஆனால் சமீப காலமாகவே அரசுக்கும், தீவிரவாதத் தலைவர்களுக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அவர்கள் மீது ராணுவநடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X