தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
-ரா-ணு-வ மு-கா-மை நள்-ளிர-வில் தாக்கி-ய வி-டு-த-லைப் புலிகள்

கொழும்பு:

யாழ்ப்பாணம் அருகே அரியாலியில் ரா-ணு-வ முகாமைப் பிடிக்க நள்-ளி-ர-வு 1 மணிக்-கு பு-லி-கள் தாக்-கு-தல் நடத்-தி-னர். ஆனால், விடுதலைப் புலிகளின்முயற்சியை ராணுவத்தினர் முறியடித்து விட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை கைப்பற்றிய கைத்தாடி ராணுவ முகாம் பகுதியில் இந்த சண்டை வெள்ளக்கிழமை காலை நடந்தது. அரியாலி சண்டையில்நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.

நள்ளிரவுக்கு மேல் விடுதலைப் புலிகள், ராணுவ நிலைகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். அவர்களை எதிர்த்து ராணுவத்தினரும் தாக்குதல்தொடுத்தனர். எட்டு அதிகாரிகள் உள்பட 36 ராணுவத்தினர் இதில் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பலாலி ராணுவ மருத்துவமனைக்குஎடுத்துச் செல்லப்பட்டனர்.

முகாம்களை புலிகள் பிடிக்கவில்லை: ராணுவம்

அரியாலி, தானகிளப்பு, நாவற்குழி ஆகிய பிரிவுகளில் உள்ள ராணுவ முகாம்கள் இன்னும் ராணுவத்திடம்தான் உள்ளன. இவற்றைக் கைப்பற்றியதாகவிடுதலைப் புலிகள் அறிவித்ததில் உண்மையில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது.

இதேபோல, வாலிகிராமம் கிழக்குப் பகுதியில் சிறிய அளவிலான விடுதலைப் புலிகளின் படை ஊடுறுவியது. இப்பகுதியில் மக்கள் அதிக அளவில்வசிக்கின்றனர். இவர்களைத் தேடும் பணியை ராணுவம் தொடங்கியது. அங்கிருந்த புலிகள் துரத்தப்பட்டு விட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.

யாழ்ப்பாணம் நகருக்குள் நுழைய விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் ஒவ்வொறு முயற்சியையும் ராணுவம் உடனுக்குடன் முறியடித்து வருகிறது.

தப்பியோடிய ராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு:

இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தப்பியோடிய ராணுவ வீரர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால் அவர்களுக்குப்பொது மன்னிப்பு அளிக்கப்படும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தளபதி சிரிலால் வீரசூர்யா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், தப்பியோடிய ராணுவ வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. அதே பொறுப்பில்அவர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்குரிய சம்பளம், சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். மீண்டும் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் பணியில்அமர்த்தப்படுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இதுவரை மொத்தம் 15,000 ராணுவ வீரர்கள் தப்பியோடி தலைமறைவாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+