தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
22ம் தேதி சென்-னை -தி-ரும்-பு-வார் க-ரு-ணா-நி-தி

சென்னை:

திட்டமிட்டபடி தமது டெல்லி நிகழ்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி22ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படுகிறுது.

பிரதமரின் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகமுதல்வர் கருணாநிதி வியாழக் கிழமை மாலை 5.15 மணிக்கு டெல்லி புறப்பட்டுச்சென்றார்.

டெல்லியில் வெள்ளிக் கிழமை நடைபெறவிருந்த காவிரி ஆணையக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா புறக்கணித்ததால் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனாலும், முதல்வர் கருணாநிதி உடனடியாக சென்னை திரும்பவில்லை.திட்டமிட்டபடி டில்லியில் வெள்ளிக் கிழமை காலை பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப்பேசினார். தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடு பற்றி இருவரும் விவாதித்தனர்.கடந்தஆணடை விட தமிழகத்திற்கு இவ்வாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை குறித்தபேச்சுவார்த்தையில் பங்கேற்றார். மத்திய நீர் பாசனத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்தகூட்டத்தில் கேரள முதலமைச்சர் நாயனாரும் கலந்து கொண்டார்.

சனிக்கிழமை அவர் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில்பங்கேற்கிறார். அதன் பின்னர் தான் அவரது சென்னை பயணம் தெரியவரும்.அநேகமாக அவர் திட்டமிட்டபடி தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 22ம் தேதிசென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+