தமிழகத்தில் இன்று
சுவா:
தாங்கள் சிறைப்பிடித்து வைத்துள்ள பிஜி பிரதமர் மகேந்திர சவுத்ரியைப் புரட்சிக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
பிஜி நாடாளுமன்றத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிரடியாக நுழைந்த 7 புரட்சிக்காரர்கள் துப்பாக்கி முனையில்பிரதமர் மற்றும் அமைச்சர்களைச் சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றால் பிரதமர் சவுத்ரியைக்கொன்றுவிடுவதாக மிரட்டிய புரட்சிக்காரர்கள் இப்போது அவரை அடித்துத் துன்புறுத்தி வருவதாகக்கூறப்படுகிறது. ஆனால், புரட்சிகாரர்களின் தாக்குதலில் சவுத்ரிக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றுதெரியவில்லை.
புரட்சிகாரர்களின் பிடியில் உள்ள பிரதமர் சவுத்ரி, மிரட்டலுக்குப் பணியமாட்டேன். என்னை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் சுட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறியதாக பிஜிதொலைக்காட்சி தெரிவித்தது.
இதற்கிடையே, பிஜியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அமைதியான முடிவைக் கொண்டுவர தனதுஅனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என்று அதிபர் ரது சர் கமிசேசே மாரா தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு அவர் சனிக்கிழமை ஆற்றிய உரையில், சமீபத்திய சம்பவம் பிஜி நாட்டு வரலாற்றில் மோசமானசம்பவம் என்று குறிப்பிட்டார். புரட்சிகாரர்களின் மிரட்டலுக்கு நாடு பணியாது. அவர்களை அடக்க எனக்கு உள்ளஅனைத்து அதிகாரத்தையும், படை பலத்தையும் பயன்படுத்துவேன் என்றார் அவர்.
ஏ.எஃப்.பி.












Click it and Unblock the Notifications