தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மதுரையில் 2000 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
மதுரை:
மதுரையில் 2000 டெட்டனேட்டர்கள் வைத்திருந்தது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
செக்கானூரணி அருகே கைது செய்யப்பட்ட குற்றவாளி குப்புசாமியிடமிருந்து 2000 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.
க்யூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், தேவர் சிலை அருகே குப்புசாமி சந்தேகப்படும் விதத்தில் நின்று கொண்டிருக்கும்போது கைது செய்தார்..
கைது செய்யப்பட்ட குப்புசாமி உசிலம்பட்டி மாஜிஸ்திரேட் முன் நிறுத்தப்பட்டார்.
இதுகுறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications