கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கலர் டிவி ஊழல் வழக்கில் 30ம்தேதி தீர்ப்புகூறப்படுகிறது.
அன்றைய தினம் ஜெயலலிதா. சசிகலா உள்ளிட்ட 11 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று தனி நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமைஉத்தரவிட்டார்.
ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல்வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து தீர்ப்புகூறப்போகும் இரண்டாவது வழக்கு இது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வழங்கும் திட்டம்செயல்படுத்தப்பட்டது. அதற்காக 45 ஆயிரத்து 302 கலர் டிவிக்கள் வாங்கப்பட்டன.அதில் 10 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஜெயலலலிதா,சசிகலா, முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, சத்தியமூர்த்தி, ஐஏஎஸ் அதிகாரிகள்அரிபாஸ்கர். எச்.எம்.பாண்டே உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில்வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நீதிபதி ராதாகிருஷ்ணன்முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 24ம் தேதி வக்கீல்கள் வாதம்துவங்கியது. அரசு தரப்பில் அளித்த பதிலுடன் வக்கீல்கள் வாதம் திங்கள்கிழமைமுடிவடைந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் வருகிற 30ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்றும் அன்றையதினம் எல்லா குற்றவாளிகளும் ஆஜராக வேண்டும் என்றும் திங்கள்கிழமை நீதிபதிராதாகிருஷணன் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் 20.10.97 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 14.5.98அன்று குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை 28.12.98 அன்றுதுவங்கியது. 2.3.2000 அன்று சாட்சிகள் விசாரணை முடிந்தது.
அரசு தரப்பில் 80 சாட்சிகளும், எதிர் தரப்பில் 3 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.15.3.2000 அன்று சசிகலாவும், 25.3.2000 அன்று ஜெயலலிதாவும் நீதிமன்றத்தில்வாக்குமூலம் அளித்தனர்.
இவ்வழக்கில் மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனும் குற்றவாளியாக முதலில்சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவரை நீக்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications