தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கைப் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் லலித் மான் சிங்குடன், நார்வே நாட்டுமத்தியத்தக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹீம் புதன்கிழமை பேச்சு நடத்தினார்.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வருகிறது. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வழிவகை காணுவதற்காக, எரிக் சோல்ஹீம் தலைமையில்நார்வே குழு இலங்கை வந்துள்ளது.
கொழும்புவிலிருந்து புதன்கிழமை டெல்லி வந்த சோல்ஹீம், மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் லலித் மான்சிங்குடன் பேச்சு நடத்தினார். இலங்கையில் தான் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தியஅதிகாரியிடம் அவர் எடுத்துரைத்தார்.
சுமார் 45 நிமிடங்கள் இப் பேச்சு நடைபெற்றது. அதற்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய சோல்ஹீம், இந்தியாதலையிட்டால்தான் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார். இலங்கைப் பிரச்சினையில்மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக சோல்ஹீமிடம் தெரிவித்ததாகலலித் மான் சிங் தெரிவித்தார்.
இதற்கிடையே, இலங்கையின் வட பகுதியில் தனி நாடு உருவாக்குவதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும், இலங்கைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர எந்த வித ராணுவஉதவியையும் அளிப்பதில்லை என்றும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அமைதியான முறையில் அரசியல் தீர்வுகாண விரும்புவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் லலித் மான் சிங்மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரத்துறைச் செயலர் தாமஸ் பிக்கெரிங் இடையேநடந்த பேச்சுவார்த்தையில் மேற்கண்ட கருத்துக்கள் எட்டப்பட்டன.
யு.என்.ஐ.