தமிழகத்தில் இன்று
மாருதி கார்களின் விற்பனை மிகவும் குறைந்துள்ளதால் மாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்திய மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில் மாருதி கார்களின் ஏற்றுமதி 89 சதவீதம் குறைந்துவிட்டது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்தவிற்பனையில் 4.2 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையிலும் இந் நிறுவனம் 18.4 சதவீதம் குறைவையும் சந்தித்துள்ளது.
மாருதி நிறுவனத்தின் பொக்லைன் போன்ற பல வகைகளில் உபயோகப்படும் வானங்களின் செயல்பாடு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் திருப்திகரமாகஇல்லை. இதையடுத்து, இத்தகைய வாகனங்களின் விற்பனையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. விற்பனை குறைந்துவிட்டதையடுத்து இத்தகைய வானங்களின்உற்பத்தியை மாருதி நிறுவனம் 75 சதவீதம் குறைத்துவிட்டது.
கார்களின் விற்பனை குறைந்துவிட்டாலும், மாருதி நிறுவனம் தனது கார்களின் உற்பத்தியை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாருதி நிறுவனத்தைப் போலவே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், ஃபியட் இந்தியா, மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனை சதவீதமும்குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications