தமிழகத்தில் இன்று
கருத்து சொல்ல ஏதுமில்லை: கலர் டி.வி. வழக்கு தீர்ப்பு குறித்து ஜெயலலிதா
சென்னை:
கலர் டி.வி. ஊழல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து நான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது தொடரப்பட்டிருந்த கலர் டிவி. ஊழல் வழக்கில் அவரை விடுவித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.
தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா உற்சாகமாகக் காணப்பட்டார். தீர்ப்பு குறித்து வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல ஏதுமில்லை என்ற கூறினார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் தொண்டர்கள்:
வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்களதுமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜெயலலிதாவை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்.
யு.என்.ஐ.