தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
கலர் டி.வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை

சென்னை:

Jayalalithaகலர் டி.வி ஊழலில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா, உறவினர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோரைவிடுவித்துத் தீர்ப்பளித்தார்.

நீதிபதி ராதாகிருஷ்ணன் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா மற்றும் பிறருக்கு எதிரான புகாருக்குத் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. இவர்கள் மூன்று பேரும் இந்த ஊழலில் தொடர்புடையவர்களா என்பது குறித்து உறுதியான ஆதாரம் இல்லை என்றார்.

பிப்ரவரி மாதம் 2-ம் தேதி பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு இதே நீதிபதிதான் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கினார்.இதையடுத்து தர்மபுரி அருகே அதிமுகவினர் நடத்திய கலவரத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவியர் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள்இறந்தனர்.

தற்போது வந்துள்ள தீர்ப்பின் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலில் நிற்க தகுதியிழக்கும் அபாயத்தை ஜெயலலிதா தவிர்த்துள்ளார்.

செல்வகணபதிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை:

அதேசமயம், இதே வழக்கில் குற்றம்சாட்டப்ப்டடிருந்த முன்னாள் ஊராட்சித் துறை அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் அரசு அதிகாரிகள்ஹரிபாஸ்கர், எச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

ஐவருக்கும் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

யு.என்.ஐ
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+