தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியா சணல் ஏற்றுமதி குறைந்தது
கல்கத்தா:
1999-2000-ம் ஆண்டும் முதல் 11 மாதத்தில் இந்தியா ரூ.482 கோடிக்கு சணல் பொருட்களை ஏற்றுமதிசெய்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.12 சதவீதம் குறைவாகும். இத் தகவலை மத்திய வர்த்தகத் துறைதெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கடந்த 11 மாதத்தில் 60964 டன் எடையுள்ள சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.எடையைப் பொறுத்தவரையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7 சதவீதம் குறைந்துள்ளது.
சிரியா, சவூதி அரேபியா, இத்தாலி, கொரியா, லெபனான், போலந்து ஆகிய நாடுகள் வழக்கமா அளவை விடகுறைவான அளவுக்கே சணல் பொருட்களை இறக்குமதி செய்தன. இதுதான் இந்தியாவின் சணல் ஏற்றுமதிகுறைந்ததற்குக் காரணமாகும்.
ஆனால், நடப்பு ஆண்டில் முதல் இரு மாதங்களில் சணல் ஏற்றுமதி 11.71 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்தியஅமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications