தமிழகத்தில் இன்று
டாக்சி ஓட்ட வரும் துபாய் பெண்கள்
துபாய்:
அரபு நாடுகளிலேயே முதல் முறையாக துபாயில் பெண் டிரைவர்கள் டாக்சிகளை இயக்கவுள்ளனர்.
அரபு நாடுகளில் பெண்கள் பொது இடங்களில் பணி புரிவது வழக்கம் இல்லை. இந்த நிலையில் முதல் முறையாக துபாயில் பெண் டிரைவர்கள் டாக்சிகளைஇயக்கவுள்ளனர்.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் பெண் டாக்சி டிரைவர்கள் களத்தில் இறங்கவுள்ளனர். பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும் இந்தடாக்சிகளில் பயணிக்கலாம்.
மொத்தம் ஏழு பெண் டிரைவர்கள் துபாயின் முதலாவது பெண் டாக்சி டிரைவர்கள் என்ற பெருமையைப் பெறவுள்ளனர். இவர்கள் அனைவரும் அரேபியப்பெண்கள்.
துபாய் போக்குவரத்துக் கழகம் இந்த டாக்சி சேவையை அறிமுகப்படுத்துகிறது. அரபு நாட்டு வழக்கப்படி நீண்ட கவுனும், முகத்தைத் தவிர பிற பகுதிகளைஆடைகளால் முடியும் இந்தப் பெண் டிரைவர்கள் உடை அணிந்திருப்பார்கள்.
இந்தப் பெண் டிரைவர்களுக்குப் பாதுகாப்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருப்பார். அவருக்கு துபாய் போலீஸ் முழு அதிகாரமும் வழங்கியுள்ளது. இந்த புதியமுறை வெற்றி பெற்றார், மேலும் 23 பெண் டாக்சி டிரைவர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று துபாய் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
புதிய பணி குறித்து பெண் டாக்சி டிரைவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அப்லா ஹுசைன் என்ற பெண் டிரைவர் கூறுகையில், டிரைவராக சேருவதற்கு நான்விண்ணப்பித்தபோது, எனது சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த நான் கடுமையாக போராடவேண்டியதாயிற்று.
டிரைவராக மாறுவதன் மூலம் எனது பாரம்பரியத்தை மீறுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. அதுபோலவே பலரும் நினைப்பதால்தான் தவறாகத்தோன்றுகிறது என்றார்.
சூடான் நாட்டைச் சேர்ந்த மற்றொரு டிரைவரான எஹசான் ஹுசைன் கூறுகையில், பெண்கள் விமானங்களை செலுத்தும்போது, டாக்சியை மட்டும் ஏன்ஓட்டக் கூடாது. எங்களுக்கு மூன்று மாதம் கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயணிகளுடன் எப்படிப் பழகுவது, அவர்களை எப்படி புரிந்து கொள்வது என்பதுகுறித்து எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போலவே, அரபு நாட்டுப் பெண்களும் இப்போது ஆண் ஆதிக்கம் உள்ள துறைகளில் நுழைந்துள்ளோம் என்றார்.
29 வயதாகும் சிரியாவைச் சேர்ந்த ஜமீலா பாஷா கூறுகையில், எனது கணவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுவதால் இந்தப் பணிக்கு வந்தேன்.எங்களுக்கு எந்த சலுகையையும் துபாய் போக்குவரத்துக் கழகம் தர வேண்டாம். பிற ஊழியர்களுக்கு வழங்கும் மரியாதை, சலுகைகளைக்கொடுத்தால் போதும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications