தமிழகத்தில் இன்று
இந்தியாவுக்கு வருகிறது புல்லட் ரயில்
பாட்னா:
ஜப்பானில் உள்ளதைப் போன்ற புல்லட் ரயில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
புல்லட் ரயில்களை வாங்குவது தொடர்பாக ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுடன் ரயில்வே துறை தொடர்பு கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு100 சதவீத வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஜப்பானில் புல்லட் ரயில்களை இயக்கி வரும் ஜப்பான் ரயில்வே (கிழக்கு) நிறவனம்ஆய்வு நடத்தியது. அதன் பிறகே இந்தியாவிலும் புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
வெளியுறவுத் துறை மற்றும் நிதித்துறை அனுமதி கிடைத்தவுடன் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கு சமீபத்தில் பயணம் செய்த மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் திக் விஜய்சிங், புல்லட் ரயில் குறித்து பேச்சு நடத்தினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications