தமிழகத்தில் இன்று
நீலகிரி தேயிலைக்கு 2 சதவீத விற்பனை வரியைக் குறைக்க முதல்வர் உத்தரவு
சென்னை:
நீலகிரி தேயிலை விவசாயிகளி ன் பிரச்சனைகள் குறித்து விசாரித்த அதிகாரிகள் குழுஅளித்த பரிந்துரை அடிப்படையில் தேயிலை மீதான விற்பனை வரி 2 சதவீதமாககுறைத்து தமிழக முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தேயிலை விவசாயிகளுடைய பிரச்சனை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கதொழில் துறை ஆணையர், தேயிலை வாரியத்தின் இயக்குனர், நீலகிரி மாவட்டஆட்சியர், மற்றும் இனச்கோசர்வின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர்அடங்கியகுழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழு அளித்த அறிக்கையில் வணிக வரித் துறை மூலமாக 8 சதவீதத்திலிருந்து 4சதவீதமாக தேயிலைக்கு வரி குறைக்கப்பட்டு வணிக வரித்துறையால் அளிக்கப்பட்டசலுகை குன்னூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஏல மையங்களில் விற்கப்படும்தேயிலையோடு மற்ற தேயிலை விற்பனையும் பயன் பெறுகிறது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையை நீக்கும் பொருட்டு, நீலகிரி தேயிலை மட்டும் பயன் பெறும் வகையில்குன்னூர் மற்றும் கோவை ஏல மையங்களில் விற்கப்படும் நீலகிரி தேயிலைக்கு மட்டும்விற்பனை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றுஅதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.
அந்த பரிந்துரையை ஏற்று நீலகிரி தேயிலை மட்டும் பயன் பெறும் வகையில்அறிவிக்கை வெளியிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
மேலும், அதிகாரிகள் குழு தனது இடைக்கால அறிக்கையில் குன்னூர் மற்றும் கோவைஏல மையங்களில் விற்கப்படும் மாநிலங்களுக்கு இடையிலான தேயிலைவிற்பனைக்கு (இன்டர் ஸ்டேட் சேல்ஸ்) தற்போது விதிக்கப்படும் 4 சதவீதவரியிலிருந்து 2 சதவீதமாக குறைத்து வரி விதித்தால் தேயிலை விவசாயிகளுக்கு அந்தஅளவுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்று பரிந்துரைத்தனர்.
இந்த பரிந்துரையையும் ஏற்று சி படிவம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்வெளிமாநிலங்களுக்கு குன்னூர் மற்றும் கோவை ஏல மையங்களில் விற்க்ப்படும்தேயிலைக்கு 2 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்றும் முதல்வர்ஆணையிட்டுள்ளார்.