முகத்தில் தெளித்த சாரல்...
மாட்டிஸ் கார் உற்பத்தியை அதிகரிக்க தேவூ நிறுவனம் முடிவு
டெல்லி:
சிறிய வகைக் காரான மாட்டிஸ் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் அதிகரிக்க தேவூ மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் பி.எஸ்.மின் கூறியதாவது:
தேவூ நிறுவனம் தயாரித்து வரும் சிறிய வகைக் காரான மாட்டீஸ் காருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. தற்போது, மாதத்துக்கு 6ஆயிரம் மாட்டிஸ் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
மக்களின் வரவேற்பை அடுத்து கார்களின் உற்பத்தியை 16.6 சதவீதம் அதாவது மாதத்துக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களைத் தயாரிக்க முடிவுசெய்துள்ளது. நடப்பு ஜூன் மாதத்திலிருந்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் காருக்குப் பதிவு செய்துவிட்டு நீண்ட நாள் காத்திருக்காமல் ஒருவாரத்திற்குள் கார்கள் கிடைக்கும்.
குறிப்பிட்ட நிறத்தில் கார்கள் வேண்டுமென்றால், அவர்களுக்கு இரண்டாவது வாரத்தில் கார்கள் வழங்கப்படும். டெல்லியில் பதிவு செய்த சில நாட்களில்கார்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாட்டிஸ் கார்களின் தேவை மாதத்துக்கு மாதம் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்து மாதந்தோறும்கூடுதலாக ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாட்டிஸ் கார் விற்பனைக்கும், ஹுண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ கார் விற்பனைக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த மே மாதம்6.033 மாட்டிஸ் கார்களும், 5,830 சான்ட்ரோ கார்களும் விற்பனை ஆகியுள்ளன.
நடப்பு நிதி ஆண்டில் 90 ஆயிரம் கார்களை விற்பனை செய்ய தேவூ மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உள்நாட்டு மார்க்கெட்டில் 80 ஆயிரம் மாட்டிஸ்கார்களையும், 6 ஆயிரம் சீலோ மற்றும் நெக்ஸியா கார்களையும் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் மாட்டிஸ் கார்களை வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் மின்.
யு.என்.ஐ.