For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

இலங்கையைக் கூறுபோடுங்கள் - கருணாநிதி கருத்துக்கு இலங்கை அரசியல் தலைவர் கண்டனம்

கொழும்பு:

இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு இலங்கை சிங்களஉருமயா கட்சித் தலைவர் திலக் கருணரத்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐரோப்பியக் குடியரசு நாடுகள் இலங்கையைப்பிரித்துவிடலாம் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு திலக் கருணரத்ன கடுமையானகண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

செக்கோஸ்லோவாகிய நாட்டை செக் குடியரசு என்றும் ஸ்லோவாக் குடியரசு என்றும் பிரித்தது போல்இலங்கையையும் இரண்டாகப் பிரித்துவிடலாம் என்றும் அதுதான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்றும்கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

மற்ற நாட்டு விஷயத்தில் இந்த யோசனையைக் கூறும் கருணாநிதி, தனது நாட்டிலிருந்து காஷ்மீரைபிரித்துத் தர சம்மதிப்பாரா? தனது நாட்டில் மேற்கொள்ள விரும்பாததை வேறு நாட்டில் செய்யும்படிகூறுகிறார்.

செக்கோஸ்லோவாகியாவை இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய வல்லரசு நாடுகள்உருவாக்கின. செக்கோஸ்லோவாகியா என்பது இரு தனிப்பட்ட இனத்தவரைக் கொண்டதுமட்டுமல்ல, அது இரு நாடுகளைக் கொண்டது. ஆனால், இலங்கை விஷயத்தில் அப்படியல்ல.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரித்து விடவேண்டும்.அப்படித்தான், இலங்கைப் பிரச்சினையிலும் தமிழர்களையும், சிங்களர்களையும் தனித்தனியே பிரித்து விடலாம்.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை அவர்களிடம் பிரித்துக் கொடுத்தவிடலாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.இலங்கையில் நடந்துள்ள திருமணம் பிரிப்பதற்காக அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.

கருணாநிதியின் இந்த யோசனையை இந்தியப் பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றார்கருணரத்னே.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X