தமிழகத்தில் இன்று
பொங்-கல் அன்--று வழங்--கப்-ப-டும் கு-றள்-பீ-ட வி-ரு--து
சென்னை:
குறள் பீடம் விருது தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று வழங்கப்படும் என்றுகுறள்பீடம் அமைப்பின் தலைவ-ரும் மு-தல்-வ-ரு-மா-ன தமிழக முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
-க-டந்-த 11ம் தேதி-யன்-று முதல்வர் தலைமையில் நடைபெற்ற தமிழ் இலக்-கி-யச் சங்கப்பலகையின் குறள் பீடப் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் வரவேற்றார். டெல்லி, பெங்களூர், கல்கத்தா போன்ற பல மாநிலங்களில்இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த தமிழறிஞர்கள்பலரும் கருத்துரையாற்றினர்.
குறள் பீடம் அமைப்புக்கான பொது விதிகள் ஏற்கப்பட்டன. ச.வே.சுப்ரமணியம்.சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் அப்துல் ரகுமான், எழுத்தாளர் சு.சமுத்திரம்,சண்முகசுந்தரம் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விரைவில் தமிழிலக்கிய சங்கப் பலகையும், கேரள சாகித்ய அகாடமியும் இணைந்துசென்னையில் கருத்தரங்கினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின்22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கென சிறுகதைத் தொகுப்புஒன்றினை தயார் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
இந்தி. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான சில புதினங்களைத் தேர்ந்தெடுப்பது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
ஒரு வார காலத்திற்குள் இதில் இடம் பெறுவதற்கான படைப்புகளை உறுப்பினர்கள்எழுதி அனுப்பியதும், செயற்குழுவில் அவை தேர்ந்தெடுக்கப்படும்.
குறள் பீடம் அமைப்பின் தலைவரான முதல்வர் பேசுகையில்,குறள் பீடம் விருதினைகுறள் பீடம் விருது, குறள் பீடப் பரிசு, குறள் பீடப் பாராட்டிதழ் என்ற வகையில்வழங்கலாமென்றும் தமிழகத்தின் குறள் பீடம் அமைப்பு இந்தியாவிற்கேவழிகாட்டியாக அமைய வேண்டும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications