விசாரணைக் கமிஷன் முன்பு சாட்சியம் அளிக்கிறார் குரோனியே
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப்டவுன்:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரித்து வரும் தென் ஆப்பிரிக்க விசாரணைக் கமிஷன் முன்பு முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே வியாழக்கிழமைசாட்சியம் அளிக்கிறார்.
குரோனியேவின் சட்ட ஆலோசகர் லெஸ் சாக்ஸ்டீன் இதுகுறித்துக் கூறுகையில், வியாழக்கிழமை குரோனியே சாட்சியம் அளிக்கிறர். இரண்டு மணி நேரம்குரோனியே சாட்சியம் தருவார். அதன் பிறகு குறுக்கு விசாரணை நடைபெறும்.
குரோனியே தனது சாட்சியத்தில் முழுமையான உண்மைகளைக் கூறினால், அவருக்கு சட்ட விசாரணையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கமிஷன்தலைவர் நீதிபதி எட்வின் கிங் ஏற்கனவே கூறியுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக புதிய வாக்குமூலம் ஒன்றை குரோனியே கொடுத்துள்ளார். இருப்பினும் அதில் கிரிக்கெட் வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய குரோனியே மறுத்து விட்டார் என்றார் அவர்.
பெங்களூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாட பணம் பெற்றதாக குரோனியே ஏப்ரல் மாதம் ஒத்துக்கொண்டார். இதையடுத்து அவரை கேப்டன் பதவியிலிருந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு நீக்கியது. அவர் மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகிங் தலைமையில் விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டது.