தமிழகத்தில் இன்று
விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் தவறில்லையே...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழன் மானம் காக்க களத்தில் நிற்கும் விடுதலைப்புலிகளை ம.தி.மு.க ஆதரிப்பதில் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
சென்னை தி.நிகரில் நடந்த ம.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கண்ணப்பன் பேசும்பொழுது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதுவரை இருந்தஇந்தியப் பிரதமர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் பிரதமர் வாஜ்பாய், இலங்கை தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டு அதிபர் சந்திரிகா டிவுஎடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழர் நலனிள் அக்கறை உள்ள அணி இதுவாகும். விடுதலைப்புலிகளை ம.தி.மு.க ஆதரிக்கலாமா? என்கிறார்கள். அங்கே களத்தில் விடுதலைப்புலிகள்நிற்கிறார்கள்.
தமிழனின் மானத்தை , தமிழ்ப் பெண்களின் கற்பை பாதுகாப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிப்போம். அந்த வகையில் இன்றுவிடுதலைப்புலிகள் தான் இருக்கிறார்கள் என்பதால் அவர்களை ஆதரிக்கிறோம். அதை தவறு என்று ம.தி.மு.க ஒப்புக்கொள்ளாது.
எதிர் காலத்தில் தமிழகத்தை , தமிழர்களை வழிநடத்துகிற இயக்கமாக ம.தி.மு.க திகழும். ஈரோடு மாநாட்டுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டுவாருங்கள். அங்கே நல்ல கொள்கை முடிவு எடுப்போம் என்று பேசினார் அமைச்சர் கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications