தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அசாமில் 4 உல்ஃபா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கவுஹாத்தி:
அசாமில் 4 உல்ஃபா தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அசாமில் ராங்ஜூலி கிராமத்தில் நடந்தது.
அசாமில் ராணுவத்தினர் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் சனிக்கிழமை ராங்ஜூலி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது அங்கு பதுங்குகுழிகளில் பதுங்கியிருந்த நான்கு உல்ஃபா தீவிரவாதிளை இவர்கள் சுட்டுக்கொன்றனர்.
அப்பகுதியில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏகே 47 ரக துப்பாக்கிகள், வொயர்லெஸ் போன்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இறந்தவர்களில் தீவிரவாதி தீபக் போரா என்ற போலாக் பானர்ஜி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
ராணுவத்தினர் இன்னும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications