கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

சர்ச்-சுக-ளுக்குப் பின் இப்-போ-து மசூதியில் குண்டுவெ-டிப்-பு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">குண்டூர்:

ஆந்திர மாநிலம் குண்டூரையடுத்துள்ள போத்துரிவரிதோடா பகுதியில் -ம-சூ-தி-யில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற போலீஸ் துணை சூப்ரிடென்டென்ட் ஒருவரும், பத்திரிக்கை நிருபர்கள் இரண்டு பேரும்படுகாயமடைந்தார்கள்.

இதையடுத்து அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குன்டூர் டவுன் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் வந்துகொண்டிருந்த 20 க்கும் மேற்பட்ட அரசுப் பேரூந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.

அந்த வழியாக வந்துகொண்டிருந்த பேரூந்துகள் அடித்து நொறுக்கப்பட்டதில் மாநில அரசுக்கு சுமார் ரூ 2 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், புறக்காவல் படைப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் இயங்கி வரும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருகிறது.

முதல்வர் கண்டனம்: இக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் விரைவில்கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஒரே நேரத்தில் கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய மூன்று இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்-க-ளில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+