தமிழகத்தில் இன்று
அர-சி-யல்-வா-தி-க-ளை எச்-ச-ரிக்கும் மதத் தலைவர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீநகர்:
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியினர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஊக்குவிக்கின்றனர் என்று சுவாமி அசோக் ஆனந்த் மகாராஜ் குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியினர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
மேலும் தற்போதைய அரசியல்வாதிகள், மதத்தையும், அரசியலையும் சேர்த்து குழப்பிக்கொள்கிறார்கள். இதையும் நான் வன்மையாகக்கண்டிக்கிறேன்.
மத சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்தந்த மதத் தலைவர்களிடம் விட்டுவிட்டால் நல்லது. அவர்கள் தான் மதப்பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில்சிறந்தவர்களாக இருப்பார்கள்.
அரசு மதத்தலைவர்களுக்கு எந்தவித ஆலோசனைகளையும் வழங்க வேண்டியதில்லை.
அதே சமயம் மதங்களுக்கு அவமதிப்பு ஏற்படும் சமயத்தில் நாங்கள் தட்டிக்கேட்கத் தவற மாட்டோம். எங்களுக்கு அதற்கான உரிமையும்,அதிகாரமும் உள்ளது.
நான் உலகம் முழுவதுமுள்ள மதத்தலைவர்களை சந்திக்க உள்ளேன். அவர்களிடம் நான் மனித உரிமைகள் இடையூறுகள் குறித்து விவாதிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.