தமிழகத்தில் இன்று
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ராமேஸ்வரத்திலிருந்து 28-ம் தேதி முதல் காணாமல் போன மீனவர்களைக்கண்டுபிடிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மீன் வளத் துறைஅமைச்சர் ஜெனீபர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
28.6.2000 அன்று ராமேஸ்வரம் மீன் பிடித் தளத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்றுகாணாமல் போன ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களையும், படகையும்தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.330 என்ற எண் கொண்ட மீன் பிடி படகில் ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த மீனவர்களான டெடிக் ராஜா, ராஜா, சேவியர், ராமமூர்த்தி ஆகிய நால்வரும்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். வழக்கப்படி அவர்கள் 29ம் தேதி கரை திரும்பியிருக்கவேண்டும்.
இதுவரை அவர்கள் திரும்பவில்லை என ராமேஸ்வரம் மீன் துறை உதவிஇயக்குனரிடமிருந்து தகவல் பெறப்பட்டவுடன், காணாமல் போன மீனவர்களையும்படகையும், கண்டுபிடிக்க கடற்படை மற்றும் கடலோர காவல் படையினருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் மீன் பிடி படகுகளின் உதவியுடனும் தேடுதல் நடவடிக்கைகள்தொடரப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில்காணப்பட்டால் அவர்களை மீட்டு தக்க உதவிகள் செய்து படகுடன் தமிழகத்திற்குதிருப்பி அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இலங்கையிலுள்ளஇந்திய தூதரகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெனீபர் சந்திரன்.












Click it and Unblock the Notifications