தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
காங்கிரஸில் சேர்ந்த 750 ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்கள்
சென்னை:
தி.மு.கவில் இருந்து அ.தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவில் இருந்து தி.மு.க.வுக்கும் சிலர்கட்சித் தாவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், வாழப்பாடியின் ராஜீவ் காங்கிரசில்இருந்து 750 பேர் விலகி, தமிழக காங்கிரசில் சேர்ந்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் ரகுபதி,கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்தனர்.
இதற்கு போட்டியாக தி.மு.க வை சேர்ந்தவர்களை அ.தி.மு.க வுக்கு இழுக்கும் முயற்சிநடந்தது. அதில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், அ.தி.முக வில்இணைந்தார்.
அதேபோல் ராஜீவ் காங்கிரசில் இருந்து தமிழக காங்கிரசுக்கு தாவும் நிகழ்ச்சிஇப்போது துவங்கியுள்ளது. ராஜீவ் காங்கிரஸ் நிர்வாகிகள் புரசை குமரன் தலைமையில்750 பேர் புதன் கிழமை, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில்மீண்டும் காங்கிரசில் சேர்ந்தனர்.