பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
Subscribe to Oneindia Tamil
பி.எஸ்.எப். முகாமை பிடிக்க முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமை தாக்க முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை, எல்லைப்பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள், எல்லைப் பாதுகாப்புப் படையின் 14-வது பட்டாலியன் அமைந்துள்ள டிரகாம்முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இருப்பினும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களது முயற்சியை முறியடித்தனர். தாக்குதலில் ஒரு தீவிரவாதியை வீரர்கள் கொன்றனர். இரண்டு பேர்தப்பி விட்டனர்.
கொல்லப்பட்டதீவிரவாதியிடமிருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டுகள், 120 சுற்று வெடிபொருட்கள், நான்கு கிரனேட்வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications