For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
குண்டு வெடிப்பு வழக்கு: மதானி கோவை சிறைக்கு மாற்றம்
சேலம்:
சேலம் சிறையில் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானிகோவை சிறைக்கு மாற்றப்படுகிறார்.
சேலம் சிறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைதிகள் திடீர் உண்ணாவிரதம்மேற்கொண்டனர். இதனையடுத்து டி.ஐ.ஜி எஸ்றா நேரில் சென்று விசாரணைமேற்கொண்டார்.
இந்நிலையில், வரும் ஜூலை 10ம் தேதி முதல் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின்தலைவர் அப்துல் நாசர் மதானி, கோவை சிறைக்கு மாற்றப்படுகிறார். இவர் கோவைகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.
இந்த வழக்கு விசாரணை கோவை தனி நீதிமன்றத்தில் விரைவில் துவங்க உள்ளதால்,அல் உம்மாவைச் சேர்ந்த சில கைதிகளும் கோவை சிறைக்கு மாற்றப்படவுள்ளனர்.
Comments
Story first published: Friday, July 7, 2000, 5:30 [IST]