தமிழகத்தில் இன்று
மும்பையில் கன மழைக்கு 5 பேர் பலி
மும்பை:
மும்பையில் கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனத்த மழைக்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை நகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது. சாலைப்போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மழைக்கு இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து முக்தார் ஆலம் ஷேக் (23), வீட்டு அறை இடிந்து விழுந்து குர்தீப் சிங் (9),வீட்டுச் சுற்றுச் சுவர் இடிந்து ராஷ்மி சங்கர் சிங் (35), தயாசங்கர் பாதக் (30)ஆகியோர் இறந்தனர். செம்பூரில் சனிக்கிழமை இரவு அடையாளம்தெரியாத ஒருவர் சுவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 50 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இவற்றை தீயணைப்புப் படையினர் அகற்றி வருகின்றனர்.
நகரில் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் புகுந்துள்ளதால் பல பகுதிகளுக்கு ரயில்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications