தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆப்பிரிக்காவில் ரூ. 2200 கோடியில் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டம்
ஜொஹன்னஸ்பர்க்:
ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்படுவதாக உலக வங்கியின் ஆப்பிரிக்க பிராந்தியத்தலைவர் காலிஸ்டோ மதாவோ அறிவித்துள்ளார்.
உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு பல்வேறு எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டங்களுக்கு இந் நிதிபயன்படுத்தப்படும்.
எய்ட்ஸ் என்பது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. அது சமுதாயப் பிரச்சினை. எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.
அந்தந்த நாடுகளின் அரசுகள் இப் பணியில் முழு ஈடுபாட்டுடனும், தீவிரமாகவும் ஈடுபடவேண்டும். குறிப்பாக எய்ட்ஸ் ஒழிப்புக்கு சர்வதேச நாடுகளின்ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்றார் மதாவோ.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications