தமிழகத்தில் இன்று
பிஜியில் 40 இந்தியர்கள் கடத்தி விடுதலை
சுவா:
பிஜியில் 40 வம்சாவளி இந்தியர்களை கலகக்காரர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து, பின்னர் விடுவித்தனர்.
புதன் கிழமை மாலை புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கைதுசெய்யப்பட்டார். அவருட ன் 300 புரட்சிக்காரர்களும் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பிஜியில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது.இதில் 40 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.
இவர்கள் 40 பேரும் ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்துபுரட்சிக்காரர்கள் அவர்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் ராணுவதலைமையகத்திலிருந்து வந்த தொலைபேசி உத்தரவைத் தொடர்ந்து பிணைக்கைதிகள்விடுதலை செய்யப்பட்டதாக ராணுவ மேஜர் ஹோவார்ட் தெரிவித்தார்.
இதற்கிடையே, லபாசா என்ற பகுதியில், 50 பேர் துப்பாக்கிகளுடன் சுற்றி வருவதால்மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.அப்பகுதியில், தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications