வரதட்சணை கொடுமை .. தபாலில் புகார் செய்யலாம்
சென்னை:
வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களை நேரில் வந்துதான் செய்யவேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. தபால் மூலமும் புகார் கொடுக்கும் வசதியைதமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை தமிழ்நாடு சமூக நலத்துறையுடன் இணைந்து ஆயிரம்விளக்கில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப நல ஆலோசனை மையத்தைதொடங்கியுள்ளது.
தொடக்க விழாவில் பேசிய, சென்னை மாநகர கமிஷனர் காளிமுத்து தமிழ்நாடுமுழுவதும் 50-க்கும் மேற்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. சென்னையில்மட்டும் மூன்று காவல் நிலையங்கள் இருக்கின்றது.
பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், வரதட்சணை சித்ரவதைகள்பற்றி நேரில் சென்று புகார் கொடுத்தாலும், தபால் மூலம் புகார் அனுப்பி வைத்தாலும்இனி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆலோசனை மையம் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து பேசிஅவர்களை இணைகரமாக வாழ வழி செய்ய வேண்டும். இருவரையும் சேர்ந்துவாழவைக்கும் வாய்ப்பே இல்லை என்கிற நிலை வரும்பொழுது மட்டும்குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு பணிபுரிபவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் வரும் பொழுது உடனடியாக நீதிநியாயம் கிடைக்கும் வகையில், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராக நினைத்துநல்லபடியாக பிரச்சனைகள் தீர்த்து வைக்க வேண்டும் என்று பேசினார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications