ஊட்டி தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 2.2 கோடி மானியம்
ஊட்டி:
நீலகிரியில் தேயிலை பயிரிடும் சிறு விவசாயிகளுக்கு இதுவரை 2.2 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேயிலை ஏல மைய இணை இயக்குனர்தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் தேயிலை விவசாயிகள் பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக் கோரி பெரும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பச்சைத் தேயிலை உற்பத்தி செய்யும்சிறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு முன் வந்தது.
கடந்த மே மாதம் முதல் தேயிலை உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை வழங்க, தேயிலை ஏல மையம்சார்பாக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் குறித்து தேயிலை ஏல மைய இணை இயக்குனர் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு கடந்த மே மாதம் முதல் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 1.6 கோடி ரூபாய்மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ. 1.25 கிடைத்து வருகிறது.
கூட்டுறவு சங்கங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் மூலம் இது வழங்கப்படுகிறது. இந்த தொகையை வழங்குவதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, மாதம் ஒரு முறைவழங்க அரசு டிவு செய்துள்ளது. தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விக்ரம் கபூர் தெரிவித்தார்.