சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நாளை பதில் மனு தாக்கல்
சென்னை:
5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாக உச்சநீதி மன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு தமிழக அரசு புதன்கிழமையன்று பதில் மனு அனுப்புகிறது
வீரப்பன் கோரிக்கையை ஏற்று கர்நாடக சிறையில் உள்ள 51 தடா கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
இது தவிர தமிழ்நாட்டில் சிறையில் உள்ள ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பதை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் தனித் தனியாகமனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக சென்னை கோட்டையில்செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடந்தது.
காலை பதினோரு மணிக்கு முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர்ஏ.பி.முத்துசாமி, உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் பார்த்தசாரதி, டி.ஜி.பி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸூக்கு அனுப்ப வேண்டிய பதில் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பதில் மனுவும்தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
புதன்கிழமை நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications