இந்தியாவுக்கு 20 லட்சம் கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் தேவை!
டெல்லி:
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தகவல் தொழில்நுட்ப மற்றும் கம்ப்யூட்டர்என்ஜீனியர்கள் குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்,என்ஜீனியர்கள் குறித்த டேட்டா பேஸ் உருவாக்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இந்திய தகவல் தொடர்புத் துறைக்கு அதிக தேவை இருப்பதால் அதுகுறித்து மத்தியஅரசு அக்கறை காட்டத் துவங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பப்பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு புற்றீசல் போல போவதால், அவர்களைக்கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கான சிறப்பு நடவடிக்கைக் குழு பிரதமருக்குக்கொடுத்துள்ள பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குழுவின் கூட்டம், மத்தியமனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில்டெல்லியில் நடந்தது. இதில், பேசிய ஜோஷி, பயப்படும் அளவுக்கு நிலைமைமோசமாகவில்லை. இருப்பினும் எந்தவகையான புகார்கள் எழுவதையும் அனுமதிக்கநாங்கள் தயாரில்லை.
தகவல் தொழில்நுட்ப அமைச்சரவையின் கணிப்புப்படி, இந்தியாவுக்கு 20.3 லட்சம்தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களில் 2 லட்சம்பேர் சாப்ட்வேர் உற்பத்திக்கும், 5,77,000 பேர் தகவல் தொழில்நுட்பப் பணி மற்றும்ஈ.பிசினஸுக்கும், 10.2 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பானபணிகளுக்கும் தேவைப்படுகிறார்கள்.
இந்தியாவில் இத்தனைத் தேவையிருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்லும்தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வைக்கவேண்டியது அவசியமாகும். தேசிய அளவில் இது அமையும்.
இந்த டேட்டா பேஸில் இடம் பெற விரும்பும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்,பொது தேர்வு ஒன்றை சந்திக்க வேண்டும். அவர்களைக் குறித்த பயோடேட்டாவையும் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்ச்சியாக அப்டேட் செய்துவரப்படும்.
இவர்கள் இந்தியாவை விட்டு பணி நிமித்தமாக வெளியேறும்போது தகவல்தொழில்நுட்ப சிறப்பு நடவடிக்கைக் குழு அதுகுறித்து தனியாக தகவலைத் தொகுத்துவரும். இதன் மூலம் எத்தனை பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், எத்தனை பேர்வெளியேறியுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications