சேலத்தில் தடம்புரண்ட சரக்கு ரயில்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டன. சென்னை துறைமுகத்திலிருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரிஏற்றிய சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.
ரயிலில் 3, 500 டன்கள் நிலக்கரி ஏற்றப்பட்டிருந்தது. மேட்டூரை அடுத்துள்ள புதுச்சாம்பள்ளி அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது 6 பெட்டிகள்தடம்புரண்டன.
ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டதால் பெட்டிகள் எதுவும் கவிழாமல் சாய்ந்த நிலையில்நின்று விட்டன.
இதையடுத்து 200 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மீட்ப்புப் பணியில் ஈடுபட்டனர். ஹைட்ராலிக் ஜாக்கிகளைப் பயன்படுத்தி பெட்டிகள்தண்டவாளத்தில் எடுத்து வைக்கப்பட்டன. இதனால் சில மணிநேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications